8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x

நெல்லையில் செல்போனில் விளையாடுவதில் அக்காவுடன் ஏற்பட்ட தகராறில் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டான்.

திருநெல்வேலி

நெல்லையில் செல்போனில் விளையாடுவதில் அக்காவுடன் ஏற்பட்ட தகராறில் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டான்.

8-ம் வகுப்பு மாணவன்

நெல்லை டவுன் எண்ணாயிரம் பிள்ளையார் கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு ஒரு மகளும், தருண் (வயது 13) என்ற மகனும் உள்ளனர்.

தருண் நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பும், அவரது அக்கா அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். மைக்கேல்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், மேரி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

தூக்கில் தொங்கினான்

நேற்று முன்தினம் மாலையில் அக்கா, தம்பி இருவரும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது, அவர்களுக்குள் செல்போனில் கேம் விளையாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தருண் வீட்டின் மற்றொரு அறைக்கு சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அக்கா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு தருண் துண்டால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தான்.

சாவு

உடனடியாக அவனை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், தருண் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story