பணம் வைத்து சூதாடிய 9 பேர் சிக்கினர்


பணம் வைத்து சூதாடிய 9 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 16 July 2023 6:45 PM GMT (Updated: 17 July 2023 12:07 PM GMT)

கடமலைக்குண்டு அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேர் சிக்கினர்.

தேனி

கடமலைக்குண்டு அருகே மூலக்கடை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடமலைக்குண்டு போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வருவதை கண்டதும் அங்கு சூதாடி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 37), வல்லரசு (34), பொன்னாங்கன் (34), சரவணகுமார் (39), கோவில்பாறை கிராமத்தை சேர்ந்த முருகன் (56), பச்சையப்பன் (48), சுருளிமலை (50), ராஜாங்கம் (58), அழகுமுத்து (44) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாட பயன்படுத்திய சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.900-யை பறிமுதல் செய்தனர்.


Next Story