முகாம்களில் தங்கி இருந்த 93 பேர் வீடு திரும்பினர்


முகாம்களில் தங்கி இருந்த 93 பேர் வீடு திரும்பினர்
x

விக்கிரமங்கலம் அருகே முகாம்களில் தங்கி இருந்த 93 பேர் வீடு திரும்பினர்/

அரியலூர்

விக்கிரமங்கலம் அருகே உள்ள அணைக்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் தொடக்கப்பள்ளி மற்றும் முகாம்களில் நேற்று முன்தினம் இரவு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து வருவதால் நேற்று மதியம் முகாம்களில் தங்கியிருந்த 38 ஆண்கள், 39 பெண்கள், 16 குழந்தைகள் உள்பட 93 பேர் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.


Next Story