கள்ளழகர் கோவிலில் ரூ.97 லட்சம் உண்டியல் காணிக்கை


கள்ளழகர் கோவிலில் ரூ.97 லட்சம் உண்டியல் காணிக்கை
x

கள்ளழகர் கோவிலில் ரூ.97 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

மதுரை

அழகர்கோவில்,

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உண்டியல்கள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.96 லட்சத்து 92 ஆயிரத்து 111-ம், தங்கம் 192 கிராமும், வெள்ளி 843 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.

உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர் சேகர், பிரதீபா, அருள் செல்வம், மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் 300 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story