பொதுத்தேர்வை சரியாக எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!


பொதுத்தேர்வை சரியாக எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
x

பொதுத்தேர்வை சரியாக எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த 8-ம் தேதி வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையில் பொதுத்தேர்வை சரியாக எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கின் முழு விவரம்:-

நாமக்கல் பழைய ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அன்புச்செல்வி. இவர்களுக்கு விக்னேஸ்வரன் (வயது 15) என்ற ஒரு மகனும், பிரியதர்ஷினி (13) என்ற ஒரு மகளும் இருந்தனர். விக்னேஸ்வரன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்தநிலையில் விக்னேஸ்வரன் ஒழுங்காக படிக்கவில்லை எனவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒழுங்காக எழுதவில்லை என பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விக்னேஸ்வரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இவர் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை விக்னேஸ்வரன் திடீரென காணவில்லை. அவரது பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் தேடியுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, விக்னேஸ்வரன் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு பாட்டி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நாமக்கல்லில் உள்ள தனது மகள் அன்புச்செல்வி மற்றும் வேலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story