கொடுக்கல்,வாங்கல் தகராறில் வாலிபரை காரில் கடத்திய கும்பல்


கொடுக்கல்,வாங்கல் தகராறில் வாலிபரை காரில் கடத்திய கும்பல்
x
சென்னை

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் வசந்தம் நகரைச் சேர்ந்த சையத் வசீம் அக்ரம் (வயது 33). இவர், புதுப்பேட்டையில் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவர் சுகேல் என்பவருக்கு வேறு ஒருவரிடம் இருந்து ரூ.25 லட்சம் கடனாக வாங்கிக்கொடுத்துள்ளார்.

தான் வாங்கி கொடுத்த கடனை திருப்பி தருமாறு சையத் வசீம் அக்ரம், சுகேலிடம் கேட்டதாகவும், இது தொடர்பாக சுகேலின் உறவினர்கள் சையத் வசீம் அக்ரமை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று காலை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து சையது வசீம் அக்ரமை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையது வசீம் அக்ரமை காரில் கடத்தி சென்றவர்கள் யார்? என்பது குறித்து தேடி வந்தனர்.

இதற்கிடையில் போலீசார் தேடுவதை அறிந்த கட்டத்தல்காரர்கள் மணலி அருகே சையது வசீம் அக்ரமை காரில் இருந்து இறக்கி விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். அவர் ஆட்டோ பிடித்து திருவொற்றியூர் வந்தார். அவரை மீட்ட போலீசார், அவரை கடத்தி சென்றது யார்? எதற்காக கடத்தி சென்றனர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story