தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை


தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 22 Sep 2022 7:01 PM GMT)

தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை முயற்சி

தர்மபுரி நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன் (வயது 47). ஆசிரியரான இவர் பலாமரத்து கொட்டாய் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அகிலன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டுக் கொண்டார்.

போலீசார் விசாரணை

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story