வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி


வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி
x

வயலில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முயன்றபோது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லெண்ணன் மகன் பெரியசாமி (வயது 52), விவசாயி. இவரது மனைவி அமராவதி(47).

இவர்களுக்கு 3 மகள்களும், தென்னரசு(22) என்ற மகனும் உள்ளனர். மகள்கள் 3 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். தென்னரசு மட்டும் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், பெரியசாமி மற்றும் அமராவதி ஆகியோர் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

மின்சாரம் தாக்கி பலி

பின்னர், பெரியசாமி அங்குள்ள மின்மோட்டாரின் 'சுவிட்ச்சை ஆன்' செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கூச்சலிட்ட அவரை அமராவதி காப்பாற்ற முயன்றதாக தெரிகிறது. அப்போது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.


Next Story