தேனி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தேனி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2023 9:00 PM GMT (Updated: 8 Aug 2023 9:00 PM GMT)

தேனி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

தேனியை அடுத்த பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி கவுசல்யா (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கவுசல்யா கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.

ஆனால் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கவுசல்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story