சென்னையில் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் தாய், கைக்குழந்தை உயிரிழப்பு


சென்னையில் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் தாய், கைக்குழந்தை உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Oct 2022 3:55 AM GMT (Updated: 9 Oct 2022 4:11 AM GMT)

சென்னை அமைந்தகரையில் அதிகவேகமாக வந்த பைக் மோதி தாய், கைக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை,

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் பூங்குழலி. இவர் தனது 6 மாத கைக்குழந்தையுடன் அதிகாலை 3.30 மணியளவில் சாலைக்கு மறுபுறம் உள்ள தனது கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில், பூங்குழலி மற்றும் அவரது 6 மாத கைக்குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூங்குழலி மற்றும் அவரது கைக்குழந்தை இருவரின் உடல்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பைக்கில் அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய இளைஞர், அவருடன் வந்த பெண்ணை பிடித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story