தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சாயும் நிலையில் உள்ள புளியமரம்
தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சாயும் நிலையில் புளியமரம் உள்ளது.
அரியலூர்
கீழப்பழுவூர்:
அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தமங்கலம் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் தேசிய நெடுஞ்சாலைேயாரத்தில் பழமையான புளியமரம் ஒன்று, பட்டுப்போன நிலையில் உள்ளது. சாயும் நிலையில் உள்ள இந்த மரம் சாலையில் வாகனங்கள் ெசல்லும் ேபாது விழுந்தால், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. காற்றின் வேகம் அதிகரித்தால் இந்த மரம் சாயும் நிலை ஏற்படலாம். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இந்த புளிய மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story