திருமங்கலத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை


திருமங்கலத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை
x

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டதால், திருமங்கலத்தில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

மதுரை

திருமங்கலம்,

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டதால், திருமங்கலத்தில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ஆட்டுச்சந்தை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய சந்தையாக திருமங்கலம் சந்தை விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகிறது. இந்த நிலையில் வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆடுகள் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகளும், விவசாயிகளும் திருமங்கலம் சந்தைக்கு கூடுதலாக ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நேற்று அதிகாலை 4 மணிக்கே ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை வாங்குவதற்கு திருமங்கலம் சந்தையில் கூடினர். நேற்று சந்தையானது திருவிழா கூட்டம் போல் களைகட்டி காணப்பட்டது..

போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். ஒவ்வொரு ஆடும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story