ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமானது.

சேலம்

ஏற்காடு தாலுகா கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சு மூலம் அவரை வாளவந்தி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். அவசர நேரத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்சு அவசர மருத்துவ உதவியாளர் அசோகன், டிரைவர் ஆசைதம்பி ஆகியோரை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.


Next Story