விழுப்புரம் அருகேகாதல் திருமணம் செய்த பெண் தற்கொலை


விழுப்புரம் அருகேகாதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம்


கண்டாச்சிபுரம் தாலுகா அ.கூடலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகள் பூந்தமிழ் (வயது 21). இவரும் சென்னகுணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரூபன்ராஜ் (21) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ரூபன்ராஜ், பெங்களூருவில் தங்கியிருந்து பூ வியாபாரம் செய்து வருகிறார். அவ்வப்போது இவர் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதமாக கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் பூந்தமிழை அவரது கணவர் ரூபன்ராஜ் அடித்து விட்டதாக கூறப்படுகிறது.

பெண் தூக்குப்போட்டுதற்கொலை

இதனால் மனமுடைந்த பூந்தமிழ், தனது கணவர் வீட்டு மாடியில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் துப்பட்டாவினால் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் பூந்தமிழ் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது தந்தை ராஜகோபால், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 10 மாதத்திலேயே பூந்தமிழ் இறந்துவிட்டதால் இதுகுறித்து விழுப்புரம் கோட்டாட்சியரின் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story