கயத்தாறில் புதிய பஸ் நிலையத்திலுள்ளகழிப்பறையில் தொழிலாளி மர்மச்சாவு


தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

கயத்தாறில் புதிய பஸ் நிலையத்திலுள்ளகழிப்பறையில் தொழிலாளி மர்மான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் தொழிலாளி மர்மான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

கயத்தாறு அருகிலுள்ள தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால்நடந்தான் குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மாயாண்டி (வயது 42). இவர் நையாண்டி மேளம் அடிக்கும் தொழிலாளி. இவர், நேற்று கயத்தாறில் நடந்த வாரச்சந்தை வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்க வந்துள்ளார்.

மர்மச்சாவு

அவர் புதிய பஸ்நிலையத்திலுள்ள கழிப்பறையில் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார்். கழிப்பறைக்கு சென்றவர்கள் இதுகுறித்து கொடுத்த தகவலின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்மமான முறையில் பிணமாக கிடந்த மாயாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன?

சந்தைக்கு வந்த அவர் கழிப்பறைக்கு ெசன்றபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது எப்படி? திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன மாயாண்டிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


Next Story