இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் மாயமானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, 2 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும் இவர் பெற்றோரிடம் தான் ஒருவரை காதலித்து வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த பெற்றோர் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இதனால் திருப்பூரில் இருந்த தனது மகளை கடந்த 6-ந் தேதி வீட்டிற்கு வரவழைத்தனர். கடந்த 8-ந் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இளம்பெண் வீட்டிற்கு வரவில்லை.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் நேற்று ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.


Next Story