கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் இளம்பெண் காத்திருப்பு போராட்டம்


கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் இளம்பெண் காத்திருப்பு போராட்டம்
x

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் இளம்பெண் ஒருவர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர்

காத்திருப்பு போராட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தனது உறவினர் மற்றும் 3 குழந்தைகளுடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருப்பதாக கூறி மிரட்டி ரூ.50 ஆயிரம் வரை வாங்கி சென்றார்.

பணம் கேட்டு மிரட்டல்

இந்தநிலையில் அவர் தொடர்ந்து பணம் கேட்டு என்னை மிரட்டி வருவதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதையடுத்து, அந்த பெண் தனது குழந்தைகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story