மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 8 March 2023 6:47 PM GMT)

கீழ்வேளூர் அருகே‌ மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோகூர் வெட்டாறு பாலம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கீழ்வேளூர் அருகே உள்ள பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த தங்கபாண்டியன் (வயது38) என்பதும் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story