இளம் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது


இளம் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது
x

சென்னை புளியந்தோப்பு அருகே இளம் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை புளியந்தோப்பு அன்சாரி தெருவைச் சேர்ந்தவர் ருக்சா பர்வீன் (வயது 20). இவர் நேற்று மாலை கேட்டரிங் வேலைக்கு செல்ல கார் புக் செய்து விட்டு சாலையோரம் காத்திருந்தார்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ருக்சா பர்வீனின் செல்போனை பறிக்க முயற்சி செய்தார். அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அந்த வாலிபர் தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து புளியந்தோப்பு கே.பி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22) என்பவரை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story