கோவில்பட்டியில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை


கோவில்பட்டியில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில்காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் புலிக்குகை ரோட்டை சேர்ந்தவர் கனகதுரை மகன் செல்வம் (வயது 25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். செல்வம் கடந்த ஆண்டு புவனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வம் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story