100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு; பணித்தள பொறுப்பாளர் பணியிடை நீக்கம்


100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு; பணித்தள பொறுப்பாளர் பணியிடை நீக்கம்
x

கலசபாக்கம் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு தொடர்பாக பணித்தள பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழவரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கால்வாய் தூர்வாருதல், ஏரிக்கரை பலப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலு ஆய்வு செய்ய சென்றார். அப்போது 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு செய்ததாக பணித்தள பொறுப்பாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story