நடிகை திவ்யா அளித்த புகாரில் கைதான நடிகர் அரணவ்க்கு நிபந்தனை ஜாமீன்


நடிகை திவ்யா அளித்த புகாரில் கைதான நடிகர் அரணவ்க்கு நிபந்தனை ஜாமீன்
x

கர்ப்பிணியான தன்னை தாக்கியதாக நடிகை திவ்யா அளித்த புகாரில் கைதான நடிகர் அரணவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

பூந்தமல்லி,

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர் அரணவ் மற்றும் நடிகை திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி சரமாரியாக புகார் தெரிவித்து வந்தனர்.

இதில் கர்ப்பிணியான தன்னை அரணவ் தாக்கியதாக போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்தார். அதன்பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அரணவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடிகர் அரணவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நிபந்தனை ஜாமீன்

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு பூந்தமல்லி கோர்ட்டில் அரணவ் மனு அளித்திருந்தார். நேற்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஸ்டாலின், நடிகர் அரணவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி அவர் 2 வாரங்களுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் 2-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்தான் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அரணவ் இன்று(சனிக்கிழமை) புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆவார் என தெரிகிறது.


Next Story