பாட்டி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


பாட்டி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாட்டி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

திருவானைக்காவல் நெல்சன்ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 33). பூ கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவரை வளர்த்த பாட்டி பொன்னம்மாள்(75) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். இதனால் அவரது உடலை பார்த்து அழுது கொண்டிருந்த தினேஷ்குமார், திடீரென வீட்டின் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனால் அங்கிருந்தவர்கள் சந்தேகமடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தினேஷ்குமார் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story