புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x

புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசித்தார்.

ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சூரியமூர்த்தி, வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுதிமொழி ஏற்கப்பட்டபோது புகையிலை பொருட்களை உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.


Next Story