20 ஆண்டுகளுக்கு பின் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவை - மக்கள் உற்சாகம்


20 ஆண்டுகளுக்கு பின் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவை - மக்கள் உற்சாகம்
x

திருத்துறைப்பூண்டியில் இருந்து கிளம்பி அகஸ்தியன்பள்ளி சென்றடைந்த புதிய ரெயிலுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேதாரண்யம்,

திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியன்பள்ளி வரையிலான புதிய அகல ரெயில்பாதை பணிகள், 294 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வேதாரண்யத்தில் புதிய அகல ரெயில் பாதையில், பிரதமர் மோடி ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து கிளம்பி அகஸ்தியன்பள்ளி சென்றடைந்த புதிய ரெயிலுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ரெயில்சேவை வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, 5 நாட்களில் காலை மற்றும் மாலை என இருவேளை இயக்கப்பட உள்ளது.


Next Story