ரத்து செய்யப்பட்ட பட்டப்படிப்பு ஊக்கத் தொகையை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ரத்து செய்யப்பட்ட பட்டப்படிப்பு ஊக்கத் தொகையை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

ரத்து செய்யப்பட்ட பட்டப்படிப்பு ஊக்கத் தொகையை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

ரத்து செய்யப்பட்ட பட்டப்படிப்பு ஊக்கத்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டுக்கோட்டை கிளை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட இணை பொறுப்பாளர் முகமது அசாருதீன், கோட்ட பொறுப்பாளர் இளையபாரதி, வட்ட தலைவர்கள் மகரஜோதி, சரவணன், வட்ட செயலாளர்கள் ஆனந்த ஜோதி, செந்தில், பொருளாளர்கள் ராஜமாணிக்கம், கார்த்திக், துணை செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு, ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தரி நன்றி கூறினார்.


Next Story