3 ½ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்


3 ½ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்
x

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3 ½ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

திருப்பூர்

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3 ½ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம்கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

இதன்படி நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 7 ஆயிரத்து 998 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனை தொடர்ந்து டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.15-க்கும் ஏலம் விடப்பட்டது.

தேங்காய் பருப்பு ஏலம்

மேலும் 16 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.80.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த 3 ஆயிரத்து 79 தேங்காய்கள் கூடுதலாகவும், 24 தேங்காய் பருப்பு மூட்டைகள் குறைவாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.1.50-ம், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.5.25-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த 134 வார காலமாக வரத்து இல்லாததால் எள் ஏலம் நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பகல், இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர், சாரல், மிதமான, பலத்த மழையால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேங்காய் வரத்து குறைவாக இருந்த போதிலும் விலை சற்று கூடுதலாகவே விவசாயிகளுக்கு கிடைத்து உள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.80-ஐ தாண்டி உள்ளது.

3½ டன் ஏலம்

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 3 ½ டன் அளவில் மொத்தம் ரூ‌. 89 ஆயிரத்து 69-க்கு வேளாண் விளை பொருள்கள் ஏலம் விடப்பட்டது.

இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story