விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்


விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:45 PM GMT)

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை

சீர்காழி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சீர்காழியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தரங்கம்பாடி, சீர்காழி வட்டங்களில் முழுவதும் சேதமடைந்தன. இதுவரை 60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக அறிவித்த திட்டங்கள் விவசாயிகளை சென்றடைந்துள்ளதா? என்பதை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். இது தொடருமேயானால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார். அப்போது விவசாய சங்க தலைவர்கள் கணேசன், முருகேசன், பன்னீர்செல்வம், முருகன், இளங்கோவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story