சாராயம் காய்ச்சியவர் கைது


சாராயம் காய்ச்சியவர் கைது
x

சிறுமலை அருகே, சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

சிறுமலை அருகே அருவிப்பள்ளம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அருவிப்பள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சாணார்பட்டியை அடுத்த தவசிமடை வடுகபட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 50) என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story