முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் நடையனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1995-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பில் 27 ஆண்டுகளுக்கு பின் தங்களுடன் பயின்ற நண்பர்களை பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களின் கால்களில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில், 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story