அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியரும் தமிழ் ஆசிரியரும் கட்டி புரண்டு சண்டை
அரசு பள்ளியில் கட்டிபுரண்டு சண்டையிட்ட ஆங்கில ஆசிரியரும் தமிழ் ஆசிரியரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசுப்பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கொண்ட 2 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சந்தோஷும், தமிழ் ஆசிரியர் தமிழ்செல்வனும் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மாறி மாறி அடித்து கொண்டனர்.
இருவரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story