எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு ஒரு கி.மீ. தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் ஆனது


எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு ஒரு கி.மீ. தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் ஆனது
x

பொதுக்குழுவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு வழியெங்கும் பூமழை பொழிந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூமழை பொழிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக பசுமை வழிச்சாலை வழியாக வானகரத்திற்கு காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமி காரின் முன்பும், பின்பும் தொண்டர்களின் கார்கள் அணிவகுத்து வந்தது. வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பை ஏற்றபடி எடப்பாடி பழனிசாமி கார் முன்னேறியது.

அவரது காரில் தொண்டர்கள் கூடை, கூடையாய் மலர்களை கொட்டி பூமழை பொழிந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

பல இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மகளிர் அணி சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொண்டர்கள் வெள்ளத்தில்...

ஆரத்தி எடுக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு குங்கும பொட்டு வைக்கப்பட்டது. வானகரத்தை எடப்பாடி பழனிசாமி கார் நெருங்கிய போது சாலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அ.தி.மு.க. கொடியின் நிறமான கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற பலூன்களை பறக்கவிட்டனர். பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் எடப்பாடி பழனிசாமி கார் மண்டப வளாகத்திற்குள் நுழைவதில் சிரமம் ஏற்பட்டது. வானகரத்தில் இருந்து மண்டபம் வருவதற்கு அதாவது ஒரு கி.மீ. தூரத்தை கடக்கவே சுமார் ஒரு மணி நேரம் ஆனது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கருப்பு உடை அணிந்திருந்த பாதுகாவலர்களும், போலீசாரும் தொண்டர்களை விலக்கி எடப்பாடி பழனிசாமி உள்ளே வருவதற்கு உதவினர். எடப்பாடி பழனிசாமி விழா மேடையை 11.10 மணிக்கு வந்தடைந்தார்.


Next Story