மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்


மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்
x

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

விருதுநகர்


விருதுநகர் தொழிலதிபர் குமரவேல் கொலை வழக்கில் விருதுநகர் மேற்கு போலீசார் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கில் தொடர்புடையவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று விருதுநகரை சேர்ந்த அமிர்த சங்கர் (வயது 30) என்பவர் சென்னை மெட்ரோ பாலிட்டன் 6-வது மாஜிஸ்திரேட்டு கோட்டில் சரணடைந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி இவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மேற்கு போலீசார் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story