குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
x

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நடந்தது.

ஈரோடு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று எடுக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டா் தொடங்கி வைத்தார். வாகனங்களில் அவர் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்புத்திட்ட கலெக்டர் குமரன், தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சுப்பிரமணியம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story