அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பம் வரவேற்பு


அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பம் வரவேற்பு
x

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிற்பயிற்சி நிலையங்கள்

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 24.6.2022 முதல் 20.7.2022 முடிய விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப்பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்களை அறிய மேற்கண்ட இணையதளத்தினை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் வரவேற்பு

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணிணி, மிதிவண்டி, பாடப்புத்தகம், மூடுகாலணி, சீருடை, வரைபட கருவிகள், இலவச பஸ்-பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது பிரபல தொழிற்நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9380114610, 8072217350, 9789695190 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ விண்ணப்பதாரர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஜிபே மூலமாக செலுத்தலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 20.7.2022 ஆகும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story