வாலிபர் மீது தாக்குதல்; 4 பேர் கைது


வாலிபர் மீது தாக்குதல்; 4 பேர் கைது
x

வீரவநல்லூரில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் சுடலைக்கண்ணு என்ற சுரேஷ் (வயது 24). விவசாயி. இவரை முன்விரோதம் காரணமாக அரிகேசவநல்லூரை சேர்ந்த ராஜசுப்பிரமணியன் மகன் கஜேந்திரன் (20), சிவன் மகன் சங்கரலிங்கம் (26), மானாபரநல்லூரைச் சேர்ந்த சுப்பையா மகன் ஹரிசிதம்பரம் என்ற விக்னேஷ் (22) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story