சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கு ஏலம்; ஒரே நாளில் 300 ரூபாய் உயர்ந்தது


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கு ஏலம்; ஒரே நாளில் 300 ரூபாய் உயர்ந்தது
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 300 ரூபாய் விலை உயர்ந்தது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 300 ரூபாய் விலை உயர்ந்தது.

பூ மார்க்கெட்...

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4½ டன் பூக்கள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.175-க்கும், செண்டுமல்லி ரூ.57-க்கும், பட்டுப்பூ ரூ.110-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.

கர்நாடக வியாபாரிகள்

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.750-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விலைபோனது.

அதன்படி பார்த்தால் ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.260 குறைந்தது. முல்ைல 40 ரூபாயும், காக்கடா ரூ.25 ரூபாயும், பட்டுப்பூ 10 ரூபாயும் விலை குைறந்தது.

கனகாம்பரம் மட்டும் ஒரே நாளில் கிலோவுக்கு 300 ரூபாய் விலை உயர்ந்தது. கர்நாடக மாநில வியாபாரிகள் கனகாம்பரத்தை அதிக அளவில் போட்டி போட்டு வாங்கியதால் அதன் விலை அதிகரித்தது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story