கத்திமுனையில் வாலிபரிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து பணம் எடுத்த 4 பேர் கும்பல்


கத்திமுனையில் வாலிபரிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து பணம் எடுத்த 4 பேர் கும்பல்
x

கத்திமுனையில் வாலிபரிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து பணம் எடுத்த 4 பேர் கும்பல்

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சொக்கநாதன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணன் (வயது 31). இவர் கப்பலூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் புளியங்குளம் பகுதியில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கரவாகனத்தில் மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சொக்கநாதன்பட்டி விலக்கு பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் முத்துக்கண்ணனை வழிமறித்தது.

மேலும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். முத்து கண்ணன் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அவரை சோதனை செய்த மர்ம நபர்கள் முத்துக்கண்ணனிடம் ஏ.டி.எம். கார்டு இருந்தது தெரியவந்தது. ஏ.டி.எம். கார்டை பறித்த கும்பல் அவரிடம் ரகசிய குறியீட்டு எண்ணை (பின் நம்பர்) கேட்டுள்ளனர். ரகசிய குறியீட்டு எண்ணை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 3 பேர் முத்துக்கண்ணனை கத்திமுனையில் வைத்துவிட்டு ஒருவரை மட்டும் அனுப்பி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க அனுப்பி உள்ளனர். அதில் ரூ.3,500-ஐ எடுத்து விட்டு மீண்டும் ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளனர். பின்னர் அந்த 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

பணத்தை பறிகொடுத்த முத்துக்கண்ணன் திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 4 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை தீவிர படுத்தி உள்ளனர்.


Next Story