ரெயில்வே ஊழியர் மீது தாக்குதல்


ரெயில்வே ஊழியர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 7 March 2023 7:00 PM GMT (Updated: 7 March 2023 7:01 PM GMT)

ரெயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே வையகளத்தூரில் உள்ள ரெயில்வே கேட் கீ மேனாக வேலை பார்த்து வருபவர் பிரவீன்ராஜ் (வயது36). இவர் நேற்று பணியில் இருந்த போது வையகளத்தூரை சேர்ந்த 3 பேர் தாக்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் பிடித்து தஞ்சை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் தஞ்சைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story