தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:46 PM GMT)

சாயல்குடி அருகே தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே கீழக்கிடாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு போட்டியில் தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கீழக்கிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் தங்கையா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார்.. முன்னாள் ஊராட்சி தலைவர் சரஸ்வதி முத்துகிருஷ்ணன், ஆசிரியர்கள் சாஸ்திரி, ரேணுகா தேவி, தேவ சகாயம், எட்வின், இமானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளை ஆசிரியர் குருசாமி தொகுத்து வழங்கினார்.

கனடாவில் வசிக்கும் டாக்டர் சிவக்குமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்களும், மாணவ-மாணவிகள் 13 பேருக்கு ரொக்க பரிசும் வழங்கி கவுரவித்தார்.சிறப்பு விருந்தினராக தேசிய திறனாய்வு மாநில கருத்தாளர் மோகன் கலந்து கொண்டார். ஊராட்சி துணைத்தலைவர் அரேபியா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பெற்றோர், கிராம பொதுமக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை பீர் பாத்திமா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story