பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு


பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில்  வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
x

பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஈரோடு

பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு குழு

வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகிறது. இந்த ரகங்களின் கரு விதைகளை கொண்டு, கோவை வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் விதை பண்ணைகளை அமைத்து வல்லுனர் விதை உற்பத்தி செய்து, மாநில அரசு விதை பண்ணைகளுக்கு விதை பெருக்கத்துக்காகவும், விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் விதைகளை வழங்கி வருகிறது.

இவ்வாறு அமைக்கப்படும் விதை பண்ணைகளை ஆய்வு செய்து, வயல் ஆய்வு தரத்தை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் வகையில், வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், விதைப்பயிரின் பூப்பருவம், அறுவடை பருவம், விதை குவியல், விதை சுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதையின் தரத்தை உறுதி செய்கின்றனர்.

ஆய்வு

நடப்பு பருவத்தில், பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நெல், கோ51 ரகம் வல்லுனர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள விதை பயிர் பூப்பருவத்தில் உள்ளன. இந்த விதை பண்ணையை பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு, அமுதா, ஈரோடு விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சு.மோகனசுந்தரம், விதை சான்று அலுவலர்கள் மாரிமுத்து, ராதா ஆகியோர் அடங்கிய வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

விதை பயிர் நடவு முறை, விதை பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றை தனித்தனியாக ஆய்வு செய்தனர். தரமான வல்லுனர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story