தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,679 கனஅடி தண்ணீர் வருகிறது- அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது


தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு  7,679 கனஅடி தண்ணீர் வருகிறது- அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது
x

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 679 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது.

ஈரோடு

பவானிசாகர்

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 679 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாலும் கோயமுத்தூர் மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதாலும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 389 கனஅடி தண்ணீர் வந்தது. இது நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரத்து 679 கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 85.35 அடி ஆனது.

அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story