பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு


பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
x

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது வருகிறது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 6 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 24 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 86.37 அடியாக இருந்தது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story