நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை- பொதுப்பணித்துறை அறிவிப்பு


நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை- பொதுப்பணித்துறை அறிவிப்பு
x

நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு

பவானிசாகர்

நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பவானிசாகர் அணை பூங்கா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து உள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை இதற்கு உண்டு. அணையின் முன் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் வண்ண வண்ண மலர்கள், ஊஞ்சல், சறுக்குப் பாறை, நீரூற்று, படகு சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. ஆகவே இந்த பூங்காவிற்கு ஈரோடு மாவட்டம் மற்றும் அருகே உள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வார்கள்.

ஆடிப்பெருக்கு

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணை முன்னால் உள்ள பூங்காவில் குவிவது வழக்கம். காரணம் அன்றைய தினம் மட்டும் சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சென்று அங்கு கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்படும்.

அனுமதி இல்லை

இந்த நிலையில் இந்த வருடம் ஆடிப்பெருக்கு திருவிழா அன்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்து உள்ளது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 100.52 அடியாக இருந்தது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி அணையின் மேல் பகுதியில் அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. பொதுப்பணித்துறையின் இந்த உத்தரவு சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story