இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது


இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது
x

இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா பொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் யுவராஜா (வயது 28). இந்நிலையில் இவரது குடும்பத்திற்கும் மணப்பாறை தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்த தங்கவேல் குடும்பத்திற்கும் இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விராலிமலை அருகே பொருவாயில் உள்ள இடத்தில் தங்கவேல் குடும்பத்தினர் கொட்டகை அமைத்து இடத்தை சுற்றிலும் வேலி அமைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை அறிந்த யுவராஜா குடும்பத்தினர் தங்கவேல் குடும்பத்தினர் கொட்டகை போட்டிருந்த இடமானது தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி கொட்டகையை பிரித்துள்ளனர். இதனையறிந்த தங்கவேல் குடும்பத்தினர் யுவராஜா வீட்டிற்கு சென்று கொட்டகையை ஏன் பிரித்தீர்கள் என கேட்டு அவர்களை தாக்கி தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் யுவராஜா அவரது தந்தை முத்துச்சாமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து யுவராஜா விராலிமலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தங்கவேல் (51), அவரது மகன்கள் பிரதீப் (28), பிரபாகரன் (26) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கவேல் மனைவி ராஜகுமாரி (50), குமார் (48) ஆகிய 2பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இதேபோல் தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் பொருவாய் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி (54), இவரது சகோதரர் நல்லதம்பி (50), யுவராஜா (28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story