மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா பிரமுகர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா பிரமுகர் பலி
x

மானூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா பிரமுகர் பலியானார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா பிரமுகர் பலியானார்.

பா.ஜனதா பிரமுகர்

மானூர் அருகே உள்ள நெல்லை திருத்து பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). பா.ஜனதா பிரமுகர். இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் இவர் தனது மைத்துனர் மாரியப்பனை மோட்டார்சைக்கிளில் களக்குடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரை அங்கு விட்டுவிட்டு, மானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

விபத்தில் பலி

எட்டாங்குளம் ஊருக்கு மேல்புறம் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் முருகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்ேகாட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த முருகனுக்கு பொன்னுத்தாய் (37) என்ற மனைவியும், சங்கரி (10) என்ற மகளும், நரேந்திர பாலன் (4) என்ற மகனும் உள்ளனர்.

மற்றொரு சம்பவம்

பணகுடி கரையடி காலனியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 59). கொத்தனாரான இவர் நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் பணகுடி தண்டையார்குளம் விலக்கு நாற்கர சாலையில் சென்றார்.

அப்போது திருச்சியில் மாட்டுத்தீவனம் ஏற்றிக் கொண்டு நாகர்கோவிலுக்கு சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பணகுடி போலீசார் விரைந்து சென்று, ஹரி கிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story