ரத்ததானம் வழங்குவோர் சங்கம் தொடக்கம்


ரத்ததானம் வழங்குவோர் சங்கம் தொடக்கம்
x

விருதுநகரில் ரத்ததானம் வழங்குவோர் சங்கம் தொடங்கப்பட்டது.

விருதுநகர்


உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்ததானம் வழங்குவோர் சங்கம் தொடங்கப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டா் சங்குமணி தொடங்கி வைத்தார். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், வைஷ்ணவி ஆகியோரை செயலாளர்களாகவும், டாக்டர் திலக் ஆலோசகராகவும் கொண்ட இந்த சங்கம் ரத்ததானம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அரசு ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் பால விக்னேஷ் வரவேற்றார். இதனையொட்டி நடைபெற்ற ரத்ததான முகாமில் மருத்துவக்கல்லூரி தேசியப்படை மாணவர்கள் 71 பேர் ரத்ததானம் வழங்கினர்.


Related Tags :
Next Story