வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
x

நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளம் வடக்கு தெருவைச்சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி சந்தோசம் (வயது 55). இவர்களது மகள் காந்திமதியை அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். சமீபத்தில் காந்திமதி இறந்துவிட்டார். இதனால் சந்தோசம் தனது மகள் வீட்டுக்குச்சென்று அவரது குழந்தைகளை கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல தனது வீட்டில் வேலையை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சந்தோஷம் தனது மகள் வீட்டுக்கு குழந்தைகளை கவனிக்க சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 36 கிராம் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story