வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
x

வெங்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தை மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆயலூர் கிராமம், மேலாண்டை தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார் (வயது 55). இவர் கடந்த 8-ம் தேதி தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் திருமுல்லைவாயல் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்துக் உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 7½ பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து நேற்று செல்வகுமார் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெங்கல்-பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதியில் அடுத்தடுத்து பல்வேறு வீடுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தால் இந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.


Next Story