பழனியில் பூத்த பிரம்ம கமலம்


பழனியில் பூத்த பிரம்ம கமலம்
x

பழனியில் உள்ள ஒரு வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் பூத்தது.

திண்டுக்கல்

பழனி சன்னதிரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், தனது வீட்டில் பல்வேறு மலர்செடிகளை தொட்டிகளில் நட்டு வைத்து பராமரித்து வருகிறார். இதில் பிரம்ம கமலம் செடியும் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் தன்மை கொண்ட இந்த பிரம்ம கமலம் செடியில் தற்போது பூக்கள் பூத்துள்ளன. இந்த பூக்கள் இரவில் மட்டுமே மலர்ந்து காணப்படும். பகலில் வாடி விடும். தற்போது அவரது வீட்டு செடியில் 8 பூக்கள் மலர்ந்துள்ளன. இந்த அதிசய பூக்களை அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.


Next Story